tamilnadu

img

முழு ஆய்வுக்குப் பிறகுதான் என்எல்சியில் உற்பத்தியை துவக்க வேண்டும்

சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 9 - நெய்வேலி என்.எல்.சி. நிறு வனத்தில்  இரண்டாவது அனல் மின்  உற்பத்தி நிலையத்தின் 5-வது யூனிட்டில் பாய்லர் வெடி விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு குற்றஞ்சாட்டுகிறது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்,மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

நெய்வேலி என்.எல்.சி. நிறு வனத்தில் பெரும் வெடி விபத்தில்  சம்பவ இடத்திலேயே 6 தொழி லாளர்கள் உயிரிழந்துள்ளனர். பெரும்  தீக் காயங்களுடன் 17 தொழி லாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதில் இன்று வரை சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  மற்ற 10 தொழி லாளர்கள் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. இந்த கோர விபத்து  நடைபெற்ற 5-வது யூனிட் அருகாமையில் உள்ள 6-வது யூனிட்டில் கடந்த ஆண்டு மே மாதம் இதே போன்ற விபத்து ஏற்பட்டு ஒரு தொழிலாளி உயிரிழந்தும், மற்றொருவர் படுகாயமடைந்து கண்பார்வையை இழந்துள்ளார். அதே 6வது யூனிட்டில் இந்தாண்டு மே மாதத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் பிறகும்  என்.எல்.சி. நிர்வாகம் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியது தான் 5வது யூனிட்டில் இந்த கோர விபத்து ஏற்பட காரணம்.  

மேலும் 5வது யூனிட்டின் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளில் அதி காரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர். பாய்லரில் ஏற்படும் அளவுக்கதிமான அழுத்தத்தை குறைத்து சரியான அளவில் பராமரித்தி டும் வகையிலான தானியங்கி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட வில்லை. இந்த பாய்லரை வடி வமைத்து கொடுத்த பிஎச்இஎல் நிறு வனத்திடம் புனரமைப்பு பணிகளை கொடுக்காமல் சிக்கனம் என்ற பெய ரில் குறைந்த செலவில் பாய்லர் தொழிற் நுட்பம் தொடர்பான அனுபவமில்லாத  தனியார் ஒப்பந்ததாரரிடம் கொடுக்கப் பட்டதும், இதுபோன்ற ஆபத்து மிகுந்த பணிதளங்களுக்கு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டுவதுமான நிர்வாக நடவடிக்கைகளே  இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட காரணமாகியுள்ளன.

பணியிடங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்தும், அதை நிவர்த்தி செய்யவதற்கான ஆலோச னைகளை தொழிற்சங்கங்கள்  கூறி னாலும் நிர்வாகம் ஏற்றுக்கொள்வ தில்லை. பாய்லர் இயங்க வேண்டும். மின் உற்பத்தி செய்ய வேண்டும் வேறு  எதைபற்றியும் கவலைப்படாத நிர்வாகமாகவே என்.எல்.சி. நிர்வாகம் உள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால்  விலைமதிப்பற்ற அப்பாவி தொழி லாளர்களின் உயிர்கள் பறிக்கப் பட்டுள்ளது. அவர்களுக்கு சிஐடியு அஞ்சலி செலுத்துகிறது. அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு சிஐடியு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது.

இந்த கோர விபத்தில் பலியான வர்களின் குடும்பத்தினருக்கு ஒரு வருக்கு வேலையும், 30 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும் நிர்வாகம் அறி வித்துள்ளது.  கல்வி தகுதிக்கேற்ப வேலையும் உயிரிழந்த தொழி லாளர் குடும்பங்களுக்கு   சட்டரீதியாக  கிடைக்க வேண்டிய  நஷ்டஈட்டு தொகைக்கு மேல் கூடுதலாக   நிர்வாகம்  அறிவித்துள்ள 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

சிகிச்சையில் உள்ள தொழி லாளர்களுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கி, பணி நிரந்தரப்படுத்த  வேண்டும், இந்த விபத்தினால் தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிட நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் பாதுகாப்பு  ஆய்வுகளை நடத்த வேண்டும். அதற்காக அமைக்கப்படும் ஆய்வுக்குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இடம் பெற செய்ய வேண்டும். முழு ஆய்வுக்கு பிறகு தான் இந்த பகுதியில் உற்பத்தியை துவங்குவதான ஏற்பாடுகளை  செய்திட வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்தை  சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.